உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையமானது வீராங்கனை இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு ஒப்புதல் பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, யோகி அவர்களின் அரசாங்கம் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும், முகல்சராய் இரயில் நிலையத்தை தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு என்றும் பெயர் மாற்றியுள்ளது.