ஜி20 வரலாற்றுக் கடன் ஒப்பந்தம்
November 18 , 2020
1384 days
603
- கோவிட்டால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவ ஒரு வரலாற்றுக் கடன் ஒப்பந்தத்தை ஜி20 அமைப்பானது ஏற்படுத்தி இருக்கிறது.
- அரசாங்கக் கடனை மறுசீரமைப்பதற்கான பொதுவான அணுகுமுறைக்கு ஜி20 ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
- இதற்கான காரணம் கோவிட் நெருக்கடியானது ஏழை நாடுகளைத் தான் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத நிலைக்குத் தள்ளக் கூடும் என்பதாகும்.
- இதன் செயல்பாட்டை அமெரிக்கா கண்காணிக்கும்.
- 2019 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒட்டு மொத்தக் கடனில் 63% அளவினை சீனா கொண்டு இருந்தது.
- கோவிட் காலத்தில், வாங்கிய கடனைத் தர இயலாத விளிம்பு நிலையில் உள்ள முதல் நாடாக ஆப்பிரிக்காவின் ஜாம்பியா உள்ளது.
- இந்தத் திட்டம் பாரிஸ் கிளப் என்ற குழுவால் நிறுவப்பட்ட விதிகளிலிருந்து பெரிதும் கடன் விதிமுறைகளைப் பெற்றுள்ளது.
பாரிஸ் கிளப் குழு
- இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது பாரிஸில் மாதாந்திர அடிப்படையில் சந்திக்கும் ஒரு முறைசாராக் குழுவாகும்.
- இது கடனாளி நாடுகள் எதிர்கொள்ளும் கட்டணச் சிக்கல்களுக்குத் சாத்தியமான தீர்வுகளைக் காண்கிறது.
- இதில் 19 உறுப்பு நாடுகள் உள்ளன.
- அவற்றில் பெரும்பாலானவை ஸ்காண்டிநேவிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற நாடுகளாகும்.
Post Views:
603