ஒடிசாவின் முதல்வர் வருடந்தோறும் நடைபெறும் ஆதிவாசி மேளாவின் 2019 ஆம் ஆண்டு விழாவில் ஒடிசாவின் “குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின்” (Particularly Vulnerable Tribal Groups-PVTG) நலனுக்காக ஜீபன் சம்பர்க் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
யுனிசெப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டமானது ஒடிசாவில் உள்ள “குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரிடையே” விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறன் மேம்பாடு, சமூகத்தினருக்கு அதிகாரமளித்தல், குழுக்களுக்கிடையே புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை அளித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஒடிசா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான PVTG மக்கள் காணப்படுகின்றனர்.
1975 ஆம் ஆண்டு தேபர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் PVTG எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.