ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் Y.S.ஜெகென்மோகன் ரெட்டி சமீபத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஜெகன்னன்னா வித்யா தீவென்ன என்ற திட்டத்தின் கீழ் ரூ.672 கோடி மதிப்பிலான முதல் தவணையை வழங்கி தொடங்கி வைத்தார்.
இது 10.88 லட்சம் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்தியது.
இது வரை ஜெகன்னன்னா வித்யா தீவென்ன திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.4,879 கோடி வழங்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நிதி நெருக்கடியின் காரணமாக தமது கல்விக் கட்டணங்களைச் செலுத்த இயலாத அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குவதாகும்.
இத்திட்டம் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு உதவுவதில் அதிக ஈடுபாடு செலுத்துகிறது.
இத்திட்டம் மாநிலத்தின் 14 லட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தினைத் திரும்ப வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இத்திட்டம் நேரடியாக இத்தொகையினை அந்த மாணவர்களின் அம்மாக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும்.
இதற்கு முன்பு இத்தொகையானது கல்லூரிகளின் உரிமையாளர்கள் கணக்கில் செலுத்தப் பட்டது.