TNPSC Thervupettagam

ஜெட்டா பிரகடனம்

May 25 , 2023 423 days 229 0
  • 32வது அரபு கூட்டமைப்பு உச்சி மாநாடானது, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நிறைவடைந்தது.
  • பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரபு நாடுகளின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் ஜெட்டா பிரகடனம் இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • பிராந்தியத்தின் உறுதித் தன்மைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக, பாலஸ்தீனிய பிரச்சினையில் அரபு நாடுகளின் நடுநிலைமையை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.
  • மேலும், அரச நிறுவனங்களின் வரம்பிற்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் மற்றும் போராளிகளின் குழுக்களுக்கான அனைத்துவித ஆதரவையும் திட்ட வட்டமாக நிராகரிக்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்