மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தனது அரசின் "ஜெய் கிசான் ரின் முக்தி யோஜனா" என்ற பெயர் கொண்ட 50000 கோடி ரூபாய் அளவிற்கான விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றார்.
மாநில அமைச்சரவையானது 55 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கு தனது ஒப்புதலையும் கடன் தள்ளுபடிக்கான அதிகபட்ச வரம்பு தேதியை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியிலிருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வரைக்கும் நீட்டிப்பதற்கான தனது ஒப்புதலையும் அளித்துள்ளது.