இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் என்ற நகரினை அங்கீகரித்த முந்தைய அரசாங்கத்தின் முடிவினை ஆஸ்திரேலியாவின் தற்போதைய அரசு மாற்றியுள்ளது.
மத்திய-இடதுசாரித் தொழிலாளர் கட்சி அரசின் அமைச்சரவையானது, மீண்டும் டெல் அவிவைத் தலைநகராக மாற்றுவதை அங்கீகரிப்பதற்கு ஒப்புக் கொண்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஜெருசலேமின் அந்தஸ்து மீதான வழங்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அக்கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியது.
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாள் போரைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமை இணைத்து, முழு நகரத்தையும் அதன் "முழு அளவிலான மற்றும் பிரிக்க முடியாத தலைநகரமாக" அறிவித்தது.
பாலஸ்தீனியர்கள் கிழக்குப் பகுதியை தங்களது எதிர்கால அரசின் தலைநகராகக் கூறுகின்றனர்.