கோவா அரசானது சீமென்ஸ் லிமிடெட் மற்றும் டாய்ச் கெசெல்செஃப்ட் ஃபார் இன்டர்நேஷனல் ஜுசெமனார்பீட் (Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit India) இந்தியா என்ற நிறுவனத்துடன் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கோவாவின் தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனியின் இரட்டைநிலை தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மாநில அரசு, தொழில்துறை மற்றும் கோவாவில் திறன் பயிற்சிக்கான சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முதல் வகையான ஒத்துழைப்பாகும்.