ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பின் அமைதி ஒப்பந்தம்
January 1 , 2023 567 days 334 0
வன்முறையைக் கைவிட்டு, அமைதியான ஜனநாயகச் செயல்பாட்டில் இணைவதற்கு ஒப்புக் கொண்ட மணிப்பூர் கிளர்ச்சிக் குழுவுடன் மத்திய அரசு ஒரு அமைதி ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.
இந்த முத்தரப்பு ஒப்பந்தமானது மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசாங்கங்கள் மற்றும் ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பின் (ZUF) கிளர்ச்சிக் குழு ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
ஆயுதமேந்தியப் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றத்திற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
ஒன்றாக ஒப்புக் கொள்ளப்பட்ட அடிப்படை விதிகளை அமல்படுத்துவதை மேற் பார்வையிட ஒரு கூட்டுக் கண்காணிப்புக் குழுவானது அமைக்கப்படும்.
ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பு என்பது நாகா பழங்குடியினரின் ஜெலியாங்ராங் சமூக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பு ஆனது மணிப்பூரில் செயல்படும் 13 கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றாக தெற்காசியப் பயங்கரவாத இணையதளத்தினால் பட்டியலிடப் பட்டுள்ளது.