சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவரான D. கவின் வேந்தன் 2021 ஆம் ஆண்டு டயானா விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட பலருள் ஒருவராவார்.
அவரது சமூக சேவைகளுக்காக இந்த அங்கீகாரமானது வழங்கப் பட்டுள்ளது.
“S.M.I.L.E.Y INDIA” எனும் தனது இலாபநோக்கமற்ற இளைஞர் அறக்கட்டளைக்காக வேண்டி கவின் ஒரு பாராட்டுப் பத்திரத்தை பெற்றார்.
இந்த விருதானது சமூக சேவை (அ) மனிதாபிமானமிக்க நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் 9 முதல் 25 வயதிற்குட்பட்ட 300 குழந்தைகள் மற்றும் இளம் வயது நபர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.