இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியான “டஸ்ட்லிக் II” என்ற பயிற்சியானது உத்தரகாண்ட்டின் ராணிகேட்டில் உள்ள ஒரு வெளிநாட்டுப் பயிற்சி மையமான சௌபாட்டியா முனையத்தில் தொடங்கியது.
இந்த 2 இராணுவங்களின் வருடாந்திர இருதரப்பு கூட்டுப் பயிற்சியின் 2வது பதிப்பு இதுவாகும்.
இந்தப் பயிற்சியில் உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவம் ஆகியவற்றிலிருந்து தலா 45 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாஷ்கண்ட்டில் நடத்தப்பட்டது.
டஸ்ட்லிக் II என்ற பயிற்சியின் முக்கிய நோக்கமானது மலை சார்ந்த, ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.