கர்நாடகாவின் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கருவளர்வியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சதீஷ் அடிகா இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்ற விருதினைப் பெறுவார்.
சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் துறையில் அவர் ஆற்றிய ஒரு சிறப்பானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இவர் மருத்துவச் சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் மற்றும் கருவுறு திறன் ஆராய்ச்சி ஆகிய இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றியுள்ளார்.