TNPSC Thervupettagam

டாடா எஃகு நிறுவனத்தின் நெதர்லாந்து ஆலை - எதிர்கால தொழிற்சாலை

January 12 , 2019 2049 days 578 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) டாடா எஃகு நிறுவனத்தின் நெதர்லாந்தில் உள்ள Ijmuiden ஆலை மற்றும் 6 இதர ஆலைகளை “உற்பத்தி கலங்கரை விளக்கங்கள்” என்று உயர் தொழில்நுட்பமுடைய உற்பத்தித் திட்டங்களாக அங்கீகரித்திருக்கின்றது.
  • டாடா எஃகு நிறுவனம் வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தேவைப்படும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இது நிதி மற்றும் செயல்பாட்டுத் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
  • 2018 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மதிப்பிடுகையில், இது WEF அமைப்பின் புகழ்பெற்ற சமூகத்தில் இணைந்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றமானது உற்பத்திக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற முன்னெடுப்பின் கீழ் முன்னணி அறிவுசார் உற்பத்தி நிறுவனங்களின் (கலங்கரை விளக்கங்கள்) ஒரு வலையமைப்பை அமைத்துள்ளது.
  • இது உற்பத்தித் துறையில் அறிவுப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது. மேலும் இது உற்பத்தித் துறையில் “நான்காம் தொழிற்புரட்சிகளுக்கான” பகுதிகளில் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்