TNPSC Thervupettagam

டாப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு

January 27 , 2023 541 days 339 0
  • ஜம்மு & காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு புதிய டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் திறக்கப்பட்டன.
  • தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான மிகவும் துல்லியமான சில முன்னறிவிப்பு நிகழ்வுகளுக்காக டாப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு 2025 ஆம் ஆண்டளவில் முழு நாட்டையும் உள்ளடக்கும்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 660 மாவட்ட வேளாண் வானிலை ஆய்வு அலகுகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.
  • டாப்ளர் ரேடார்கள் மழைப்பொழிவு மற்றும் மேக அமைப்புகளின் அளவு மற்றும் தீவிரத்தைக் கண்காணிக்கவும், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்