TNPSC Thervupettagam

டிரிஸ்டன் அல்பாட்ராஸ் எதிர்கொள்ளும் எலிகள் பிரச்சினை

November 1 , 2019 1724 days 594 0
  • கௌக் தீவில் உள்ள அரிய வகை கடற் பறவையான டிரிஸ்டன் அல்பாட்ராஸ் குஞ்சுகளை மிகப்பெரிய எலிகள் கொன்று சாப்பிட்டுள்ளன.
  • கௌக் தீவானது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு உலகப் பாரம்பரியத் தளமாகும்.
  • ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சமூகமானது இந்த எலிகளைக் கொல்ல தானியங்களை அடிப்படையாகக் கொண்ட விஷத் துகள்களுடன் ஹெலிகாப்டர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • அழிவு நிலையில் உள்ள இந்தக் குஞ்சுகளானவை, பெரும்பாலும் உணவைக் தேட இதன் பெற்றோர்கள் கூட்டை விட்டு வெளியில் செல்லும்போது. கொறித்துண்ணிகளால் கொல்லப்படுகின்றன.
  • “மிகவும் அரிய இனங்கள்” என்ற பிரிவில் உள்ள இந்த டிரிஸ்டன் அல்பாட்ராஸ் பறவைகளின் 2,000 ஜோடிகள் மட்டுமே இப்போது இத்தீவில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்