TNPSC Thervupettagam

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2020

November 9 , 2021 988 days 492 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டு டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு பிரியங்கா மோஹித் என்பவரைத் தேர்வு செய்துள்ளது.
  • இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதான மலையேறும் வீராங்கனை ஆவார்.
  • இந்த விருதானது நிலம் சார்ந்த சாகசத் துறையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக வேண்டி வழங்கப்படுகிறது.
  • இவர் எவரெஸ்ட், லோட்சே மற்றும் மக்காலு போன்ற உலகின் மிக உயரிய சிகரங்களில் ஏறியுள்ளார்.
  • இவர் உலகின் 10வது உயரிய மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
  • 2020 ஆம் ஆண்டு டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகளைப் பெறும் 7 நபர்களுள் பிரியங்காவும் ஒருவராவார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்