2002 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில இந்திய காவல் பணி அதிகாரியான அபர்ணா குமார் 2018 ஆம் ஆண்டின் டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மதிப்பு மிக்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட முதல் இந்திய காவல் பணி அதிகாரி அபர்ணா ஆவார்.
இந்தியாவில் சாகச விளையாட்டுகளுக்கான அர்ஜுனா விருதுக்கு இணையான மிக உயரிய தேசிய விருது இதுவாகும்.
சாகசத் துறைகளில் உள்ள வீரர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் படுகின்றன.
விருது வழங்கப் பட்ட பிரிவுகள்:
நிலத்தில் சாகசம்: அபர்ணா குமார், தீபாங்கர் கோஷ், கே மணிகண்டன்