TNPSC Thervupettagam

டென்மார்க் நாட்டின் புதிய மன்னர்

January 24 , 2024 177 days 224 0
  • பத்தாம் ஃபிரடெரிக், அவரது தாயார் இராணி இரண்டாம் மார்கிரேத் அவர்களுக்குப் பிறகு டென்மார்க் நாட்டின் அரசராக அரியணை ஏறியுள்ளார்.
  • அவர் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பாரோ தீவு ஆகியவற்றின் அரசராக ஆட்சி செய்வார்.
  • எனினும், அரசுமுறை அதிகாரம் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் டென்மார்க் அரசாங்கத்திடம் இருக்கும்.
  • சுமார் 900 ஆண்டுகளில் தானாக முன்வந்து அரியணையை துறந்த முதல் டென்மார்க் தலைமையாக தான் மாற திட்டமிட்டுள்ளதாக மார்கிரேத் அறிவித்தார்.
  • உலகின் பழமையான முடியாட்சிகளில் ஒன்றான டென்மார்க் நாட்டில் முடிசூட்டு விழா நடத்தப் படுவது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்