அறிவியல் மற்றும் ஆன்மீகம் கலந்த தனது பணிக்காக பிரேசிலைச் சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வானியல் அறிஞரான மார்சிலோ கிளெய்சர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான டெம்பிள்டன் விருது வழங்கப்பட்டது.
டெம்பிள்டன் விருதானது 1972 ஆம் ஆண்டில் மறைந்த சர் ஜான் டெம்பிள்டன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
நுண்ணறிவு, கண்டுபிடிப்பு மற்றும் நடைமுறைப் பணிகள் மூலமாக வாழ்வின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிய சம காலத்திய மனிதர்களை கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.