ஜான் டெம்பிள்டன் பவுண்டேசன் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு டெம்பிள்டன் விருதினை உலகப் புகழ்பெற்ற விலங்கியல் நிபுணரும் வளங்காப்பாளருமான ஜேன் குடால் என்பவருக்கு வழங்கியுள்ளது.
1972 ஆம் ஆண்டில் வழங்கப்படத் தொடங்கியதிலிருந்து இன்று வரையில் இந்தப் விருதினை வென்ற முதல் விலங்கியல் நிபுணர் மற்றும் நான்காவது பெண் இவரே ஆவார்.
இயற்கை உலகில் மனிதனின் பங்கு பற்றிய புரிதலையே மாற்றியமைத்த இவரது புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.