பொது மக்களுக்காக டெல்லியின் கலால் வரிக் கொள்கை 2021-22 சமீபத்தில் வெளியிடப் பட்டது.
டெல்லி அரசானது இந்தக் கொள்கையின் கீழ், தங்கும் விடுதிகள், கிளப் மற்றும் உணவகங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது.
கொள்கை ஆவணத்தின் படி, வெளிநாட்டவர்கள் அதிகம் வருகை தந்த 28 ஆவது நகரமாக டெல்லி உள்ளது.
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
கலால் வரியானது அரசின் வருவாய்க்கான முதன்மை ஆதாரமாகும்.
டெல்லியில் வருவாயினை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டு கலால் வரிக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வரிக்கொள்கையானது முன் வைக்கப்பட்டுள்ளது.
இது மதுபான கடத்தல் கும்பலையும் ஒழிக்கும்.
இப்புதிய கொள்கையின்படி, தங்கும் விடுதிகள், கிளப் மற்றும் உணவகங்களிலுள்ள மதுபானக் கடைகள் அதிகாலை 3 மணி வரை திறந்து இருக்கும்.
மதுபான வர்த்தகத்தின் சில்லறை விற்பனையில் அரசு பெருமளவில் ஈடுபடாது.
இதனால் டெல்லியில் அரசிற்குச் சொந்தமான மதுபானக் கடைகள் மூடப்பட்டு தனியார் துறையினருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.