ஆராய்ச்சியாளர்கள் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டைனோசரின் முழுமையடையாத பகுதியளவு கிடைத்த எலும்புக்கூடு ஆனது அர்ஜென்டினாவில் உள்ள நியூகென் நகரத்தின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
இந்தப் புதை படிமங்கள் “நிஞ்சாடைட்டன் சபாடாய்” எனப் பெயரிடப்பட்ட டைனோசர் இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்கள் நிஞ்சாடைட்டனை ஒரு டைட்டனோசராக (Titanosaur) அடையாளம் கண்டு உள்ளனர்.
டைட்டனோசர்கள் என்பது 4 தூண்கள் போன்ற கால்களைக் கொண்டு நடக்கும் வகையிலான, நீளமான கழுத்து கொண்ட, தாவரங்களை உண்ணும் டைனோசர்களின் மிகப்பரந்த ஒரு வகையாகும்.