அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் அமைக்கப்பட்டுள்ள முதல் பசுமை விமான நிலையமான டோனி போலோ விமான நிலையத்தைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
வடகிழக்கு இந்தியாவில் தற்போது 16 விமான நிலையங்கள் உள்ளது.
விமான நிலையத்தின் பெயரானது அருணாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரியங்கள் மற்றும் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது.
இது, மாநிலத்தில் உள்ள சூரியன் ('டோனி') மற்றும் சந்திரன் ('போலோ') ஆகியவற்றிற்கான பழங்கால பழமையான வணக்க முறைகளைக் குறிப்பிடுகிறது.
டோனி போலோ விமான நிலையமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மூன்றாவது விமான நிலையமாகவும் அதன் தலைநகரான இட்டாநகரில் அமைந்த முதல் விமான நிலையமாகவும் விளங்கும்.