TNPSC Thervupettagam

தகைசால் தமிழர் விருது

August 12 , 2022 710 days 2067 0
  • தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் R.நல்லகண்ணு (96) அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சுதந்திரத் தின விழாவின் போது இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • நல்லகண்ணு தனது 11வது வயதில் (1936) ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தமது  போராட்டத்தைத் தொடங்கினார்.
  • 1937 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றும் போது அவருக்கு வயது 12 ஆகும்.
  • 1944 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, சென்னையில் உள்ள ஜன சக்தி அமைப்பிற்காக பணியாற்றத் தொடங்கினார்.
  • இந்த விருதை முதன் முதலில் பெற்ற நபர் இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் N.சங்கரய்யா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்