கேரளாவின் கொல்லம் நகரில், தற்போது 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
தக்காளி புளு காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் இந்த நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும் ஓர் அரிய வகை வைரஸ் தொற்றாகும்.
தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாவன சொறி, தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவை ஆகும்.
தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, கிட்டத்தட்ட தக்காளி அளவு உள்ள சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றுவதுடன் நாக்கில் நீரிழப்பு போன்ற சில அறிகுறிகளும் தென்படும்.