TNPSC Thervupettagam

தனி அடையாள சின்னமுடைய முதல் இந்திய நகரம்

December 26 , 2017 2397 days 778 0
  • தனக்கென ஓர் தனித்த சுய அடையாளத்தை அளிப்பதற்காகவும், தன்னுடைய உலகளாவிய தோற்றத்தை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கும் ஒரு சுயமான அடையாள சின்னத்தை (logo) கொண்டுள்ள முதல் இந்திய நகரமாக பெங்களூரு நகரம் உருவாகியுள்ளது.
  • பெங்களூருவில் கொண்டாடப்படும் “நம்ம பெங்களூரு ஹப்பா திருவிழாவில்” இச்சின்னம் வெளியிடப்பட்டது.
  • இதன் மூலம் தனக்கென தனியே சுயமான சுற்றுலா சின்னங்களையுடைய உலக நகரங்களான மெல்போர்ன், பெர்லின், இலண்டன், சிங்கப்பூர், பாரிஸ், நியூயார்க் மற்றும் ஆம்ஸ்டர்டேம் போன்ற மெகா சிட்டிகளின் வரிசையில் பெங்களூருவும் இணைந்துள்ளது.
  • “நம்மூர்“எனும் வடிவமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனத்தினால் இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டது.
  • சிவப்பு மற்றும் கருப்பு நிறமுடைய இந்த சின்னத்தில் “பெங்களூரு பீ யூ“ (Bengaluru Be You) எனும் குறிச்சொற்றொடர் (Tagline) கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்