11 நாட்கள் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற திறந்தவெளி நாடக விழாவான தனு ஜாத்ரா விழாவானது மேற்கு ஒடிசாவின் பார்கார்ஹில் தொடங்குகின்றது.
ஜாத்ராவின் நாடகமானது கிருஷ்ணர் மற்றும் அவரது மாமா கம்சனின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெயரிடப்பட்ட உலகின் மிக நீண்ட திறந்தவெளி நாடகமாகும்.
இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காகவும் தீமைக்கு எதிரான சிறந்த வெற்றியைக் குறிப்பதற்காகவும் இந்தத் திருவிழாவானது 1947-1948 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்திய அரசானது தனு ஜாத்ராவுக்கு தேசிய விழா என்ற ஒரு அங்கீகாரத்தை 2014 ஆம் ஆண்டு நவம்பரில் வழங்கியது.