- அருணாச்சலப் பிரதேச மாநில அரசானது பட்காய் தன்னாட்சிக் குழு மற்றும் மோன் தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றுக்கான சாத்தியமுள்ள தீர்வுகள் குறித்து விவாதிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
- இந்தக் குழுவானது துணை முதல்வரான சௌனா மெய்ன் என்பவரின் தலைமையின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் தன்னாட்சி ஆணையத்தின் கீழ் உள்ள பகுதிகள் தற்பொழுது இந்திய அரசியலமைப்பின் 5வது அட்டவணையின் கீழ் உள்ளன.
- இது இந்திய அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் உள்ள பூர்வீக (உள்ளூர்) சமுதாயத்திற்கு என்று உள்ளதைப் போல் சிறப்பு உரிமைகளை அளிக்காது.
- 6வது அட்டவணையானது 4 வட கிழக்கு மாநிலங்களில் 10 தன்னாட்சி மாவட்ட ஆணையங்களை உள்ளடக்கியுள்ளது.
- இது தன்னாட்சி மாவட்ட ஆணையங்களை உருவாக்குவதன் மூலம் அங்குள்ளப் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றது.
தன்னட்சி ஆணையங்களின் அதிகாரங்கள்
- இந்தத் தன்னாட்சி ஆணையங்கள் நில மேலாண்மை, வன மேலாண்மை, கிராம ஆணைய உருவாக்கம், பொது சுகாதாரம் மற்றும் துப்புரவு, திருமணம், சமூக நடைமுறைகள், சுரங்கம், கடன் கொடுத்தல், பரம்பரைச் சொத்து, கிராம மற்றும் நகர நிலையிலான கொள்கைகள் ஆகியவை குறித்து சட்டங்களை இயற்ற முடியும்.