TNPSC Thervupettagam

தபால் குறியீட்டு எண்ணின் 50 ஆண்டு கால வரலாறு

August 18 , 2022 702 days 437 0
  • 76வது சுதந்திரத் தின விழாவுடன், நாட்டின் மற்றொரு மைல்கல் நிகழ்வும் ஒன்று இணைந்து அனுசரிக்கப் படுகிறது.
  • அது 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தபால் குறியீட்டு எண் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
  • தபால் துறையின் கூற்றுப்படி, சுதந்திரத்தின் போது இந்தியாவில் குறிப்பாக நகர்ப் புறங்களில் 23,344 தபால் நிலையங்கள் இருந்தன.
  • தபால் குறியீட்டு எண்ணானது, பெரும்பாலும், ஒரு மாதிரியான பெயர்களைக் கொண்ட வெவ்வேறு இடங்கள் அமைந்துள்ள ஒரு நாட்டில் அஞ்சல்களை வரிசைப் படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை எளிதாக்கச் செய்வதற்கும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் கடிதங்களை விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டன.
  • தபால் குறியீட்டு எண் ஆனது 6 இலக்க எண்ணால் ஆனது.
  • முதல் எண் ஆனது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என உள்ள தபால் மண்டலத்தினையும், எண் 9 ஆனது இராணுவத் தபால் சேவையையும் குறிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பின் பின்னணியாக இருந்த நபர், மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் ஸ்ரீராம் பிகாஜி வேளான்கர் ஆவார்.
  • உலகளவில் அமெரிக்காவில் 1963 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று மண்டல மேம்பாட்டுத் திட்டக் குறியீடானது (ZIP) அறிமுகப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்