இந்திய நாட்டிலேயே முதன்முறையாக, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் தொடங்கப் பட்ட மாதிரித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் அஞ்சல் துறை ஒரு ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி அஞ்சல்களை வழங்கியது.
ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்திப்புஜ் தாலுகாவில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து அனுப்பப்பட்ட அஞ்சலானது, கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் தாலுகாவில் உள்ள நெர் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆளில்லா விமானமானது 46 கிலோ மீட்டர்களை 25 நிமிடங்களில் கடந்து சென்றது.