TNPSC Thervupettagam

தமிழகத்தில் இரும்புக் காலம்

May 12 , 2022 802 days 697 0
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்புக் காலத்தின் தொடக்கம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
  • தொல்லியல் துறையானது, ‘மயிலாடும்பாறை - வேளாண் சமுதாயத்தின் ஆரம்பம்; தமிழகத்தில் 4,200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலகே கலாச்சாரம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
  • வயது கணக்கிடப்பட்ட காலத்தில் நிலமட்டத்திற்குக் கீழே 25 சென்டிமீட்டர் வரையில் கலாச்சாரத்தினைக் காட்டும் படிமங்கள் இருப்பதால், கி.மு 2200 ஆம் ஆண்டுக்கு முன் அங்கு கற்காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கலாச்சாரம் நிலவியதாகக் கண்டறியப் பட்டது.
  • கேரளாவின் பட்டணம், கர்நாடகாவின் தலக்காடு, ஆந்திராவின் வெங்கி மற்றும் ஒடிசாவின் பாலூர் ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொள்ளும் என்றும் அத்துறை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்