திருக்கார்த்தியல் என்ற நூலிற்காக ராம் தங்கம் என்பவர் யுவ புரஸ்கார் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இது சிறுகதைகளின் ஒரு தொகுப்பாகும்.
இவரது முதல் புத்தகமான காந்திராமன் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
பின்னர் இவரது படைப்புகளான ஊர் சுற்றிப் பறவை மற்றும் மீனவ வீரனுக்கு ஒரு கோவில் ஆகியவை வெளி வந்தன.
2018 ஆம் ஆண்டு திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
இராஜாவனம் என்ற புதினம், புலிக்குத்தி என்ற அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு, கடவுளின் தேசத்தில் என்ற பயணக்கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்) போன்ற பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இந்த விருதுகளானது சாகித்ய அகாடமியினால் வழங்கப் படுகிறது.