TNPSC Thervupettagam

தமிழ் எழுத்தாளருக்கு யுவ புரஸ்கார் விருது

June 25 , 2023 392 days 259 0
  • திருக்கார்த்தியல் என்ற நூலிற்காக ராம் தங்கம் என்பவர் யுவ புரஸ்கார் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இது சிறுகதைகளின் ஒரு தொகுப்பாகும்.
  • இவரது முதல் புத்தகமான காந்திராமன் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • பின்னர் இவரது படைப்புகளான ஊர் சுற்றிப் பறவை மற்றும் மீனவ வீரனுக்கு ஒரு கோவில் ஆகியவை வெளி வந்தன.
  • 2018 ஆம் ஆண்டு திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
  • இராஜாவனம் என்ற புதினம், புலிக்குத்தி என்ற அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு, கடவுளின் தேசத்தில் என்ற பயணக்கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்) போன்ற பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
  • இந்த விருதுகளானது சாகித்ய அகாடமியினால் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்