TNPSC Thervupettagam

தமிழ்நாடு கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் விருதுகள் 2024

July 18 , 2024 8 hrs 0 min 80 0
  • அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
  • எட்டு சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளையும், 10 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்குப் பூம்புகார் மாநில விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
  • N.பாலகிருஷ்ணன், K.P. உமாபதி, S.இராஜகோபால், N.மணி ஆச்சாரி, C.முத்துசாமி ஆச்சாரி, S.கோவிந்தராஜ், B.சுலைகான் பீவி, S.தங்கஜோதி ஆகியோர் 2022-23 ஆம் ஆண்டிற்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளைப் பெற்றனர்.
  • இந்த விருதானது 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களை விருது வழங்கி கௌரவிக்கிறது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகள் ஆனது C.ரவி, S.நாகலட்சுமி, M.இராஜப்பா, M.முருகேசன், R.லோகநாதன், N.பூவம்மாள், P.வரதன், M.இராஜரத்தினம், R.சக்திவேல் மற்றும் S.லில்லி மேரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் கைவினை மேம்பாட்டிற்குப் பங்களித்த துறையில் சிறந்த 10 கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்