TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

March 22 , 2023 487 days 377 0
  • தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
  • 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 4.33% ஆக குறிப்பிடப் பட்ட மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையானது, 3.80% ஆக குறையும்.
  • 2021 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் ரூ. 58,000 கோடியாக குறிப்பிடப் பட்ட ஒட்டு மொத்த வருவாய் பற்றாக்குறையானது ரூ.55,000 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • ரூ.62,000 கோடியாக இருந்த மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது ரூ.30,000 கோடி அளவிற்கு குறைக்கப் பட்டுள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஆனது ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது நடப்பு நிதியாண்டில் ரூ.1.4 லட்சம் கோடியாக இருந்தது.
  • தமிழக அரசானது, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவியினை வழங்கவுள்ளது.
  • இந்த உதவித் தொகையானது அதிகாரப்பூர்வமாக தமிழில் 'மகளிர் உரிமைத் தொகை' அதாவது 'பெண்களுக்கான உதவி பெறும் உரிமை' என்று பொருள்படும் வகையில் அழைக்கப் படுகிறது.
  • இதற்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 7000 கோடி ரூபாய்கள் ஆகும்,
  • 2023-24 ஆம் நிதியாண்டு முதல் 30,122 என்ற எண்ணிக்கையிலான அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் இலவச காலை உணவுத் திட்டமானது விரிவுபடுத்தப்படும்.
  • எண்ணும் எழுத்தும் திட்டம் ஆனது ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப் படும்.
  • ரூ. 1000 கோடி செலவில் வடசென்னை மேம்பாட்டுத் திட்டமானது தொடங்கப்படும்.
  • மரக்காணத்தில் சர்வதேசப் பறவைகள் மையமானது அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவியானது ரூ.1,500 ஆக உயர்த்தப் பட்டுள்ள நிலையில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவியானது ரூ.2000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • தங்கம் மற்றும் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக ரூ.3,993 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், சேலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்றினை தமிழக அரசு நிறுவ உள்ளது.
  • தமிழ்நாடு அரசானது, அம்பத்தூரில் "தமிழ்நாடு உலகப் புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி வழங்கீட்டு மையம்" (TN-WISH) என்ற உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையத்தினை நிறுவ உள்ளது.
  • தஞ்சாவூரில் பிரம்மாண்ட சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.
  • 2030ஆம் ஆண்டிற்குள் 14,500 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வகையில் மாபெரும் மின் நிலையத்தினை உருவாக்குவதற்காக ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • அதிநவீன உலக விளையாட்டுத்துறை நகரம் ஆனது சென்னையில் அமைக்கப்படும்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் அறிவிக்கப்பட்டச் சமூகங்கள் மற்றும் வனப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
  • குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்கப்படும்.
  • முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மொத்தமாக ரூ. 25,000 வழங்கப் படும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பழங்குடியினர் சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வேண்டி, ‘அண்ணல் அம்பேத்கர் வணிக வாகையர் திட்டம்’ என்ற புதிய திட்டமானது தொடங்கப் படும்.
  • கணினியில் தமிழ்மொழிப் பயன்பாட்டினைப் பிரபலப்படுத்தச் செய்வதற்காக என்று தமிழக அரசானது சர்வதேச தமிழ்க் கணினி மாநாட்டினை நடத்த உள்ளது.
  • தமிழ்நாட்டினை உலகளாவிய தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படும் சேவை மையமாக மேம்படுத்துவதற்காக, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம்’ (TNTech City) ஆனது அமைக்கப்படும்.
  • மேலும் வயது முதிர்ந்த 591 தமிழ் அறிஞர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகை திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • நீலகிரி வரையாட்டினைப் பாதுகாக்கச் செய்யவும், அவற்றின் வளத்தினைக் காத்திட  செய்வதற்காகவும் ரூ. 10 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' ஆனது முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப் படும்.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கியப் பகுதிகளுக்கு ரூ.9000 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்படும்.
  • திருமங்கலம் - ஒத்தக்கடை இடையேயான மெட்ரோ இரயில் சேவையானது ரூ.8500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
  • கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் திட்டமிட்ட மேம்பாட்டிற்காக எழில்மிகு கோயம்புத்தூர் மற்றும் மா மதுரை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 33000 மெகாவாட் உற்பத்தியினைச் சேர்ப்பதன் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றலின் பங்கை 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கோயம்புத்தூரில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
  • ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயம் என்ற புதிய வனவிலங்குச் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் நிறுவப்பட உள்ள இந்தப் புதிய சரணாலயம் ஆனது மாநிலத்தின் 18 வது சரணாலயம் ஆகும்.
  • இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி தமிழ் மொழியினைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த தமிழ் மொழிப் போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோரின் நினைவாக சென்னையில் நினைவிடம் அமைக்கப் படும்.
  • கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு மைய வளாகத்தில் கட்டமைக்கப் பட்டு வரும் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவுப் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை இந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
  • செங்கல்பட்டு, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட 3 இடங்களில் புதிய டைடல் தொழில் நுட்பப் பூங்காக்கள் விரிவுப்படுத்தப்படும்.
  • மதுரையில் நிறுவப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திறக்கப்படும்.
  • பத்திரப் பதிவுக் கட்டணத்தினை 2 சதவீதமாகக் குறைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள SIPCOT தொழில் பூங்காவில் அதிநவீனத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
  • சிறந்த இணைய இணைப்பை ஏற்படுத்தவும், மலிவு விலையில் பல்வேறு எண்ணிமச் சேவைகளை வழங்கவும், மாநிலத் தலைமையகம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவேக ஒளியிழை வலையமைப்பினை உருவாக்கச் செய்யும் வகையிலான "ஒருங்கிணைந்த எண்ணிம உள்கட்டமைப்பு" என்ற ஒன்றை அரசாங்கம் அமைக்க உள்ளது.
  • தமிழ்நாடு அரசானது கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளின் விளைவுகளைத் தணிப்பதற்காக வேண்டி, தமிழ்நாடு கடற்கரை மறு சீரமைப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல் படுத்தப்பட உள்ள இந்தத் திட்டமானது, கடல் அரிப்பைத் தடுத்தல், கடல் மாசுபாட்டை  குறைத்தல் மற்றும் கடல்சார் பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாத்தல் போன்ற கொள்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சென்னை, ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் முக்கியப் பொது இடங்களில் இலவச வைஃபை (Wi-Fi) சேவை வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்