TNPSC Thervupettagam

தமிழ்நாடு பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியப் பிரிவினருக்கான தொடக்க நிறுவன நிதி

June 26 , 2022 757 days 491 0
  • தமிழ்நாடு தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்டமானது பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகிய சமுதாயப் பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
  • இது தொடர்பாக, இந்த நிதியானது அமைக்கப்பட்டது.
  • இது பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகிய சமுதாயப் பிரிவுகளைச் சேர்ந்த தொழில்முனைவு நிறுவனர்களால் உருவாக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களுக்கான ஒரு பிரத்தியேக நிதியாகும்.
  • இது முதலீட்டுக் குழுவின் ஒரு மதிப்பீடு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பங்கு அல்லது கடன் வடிவில் வழங்கப்படும்.
  • இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு, ஒரு நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைப் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியப் பிரிவைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வைத்திருக்க வேண்டும்.
  • ஒரு தொழில்முனைவோர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவராகவோ அல்லது தமிழின வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டும்.
  • மேலும் தங்களது முதன்மையானச் செயல்பாட்டுத் தளத்தைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்