TNPSC Thervupettagam

தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939 மீதான அவசரச் சட்டம்

September 10 , 2020 1410 days 679 0
  • தமிழ்நாடு மாநில ஆளுநரான பன்வாரி லால் புரோகித் அவர்கள் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939 (2வது திருத்தம்) என்ற சட்டத்தின் மீதான அவசரச் சட்டம், 2020 என்ற ஒரு சட்டத்தைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமான பொது முடக்கம் மற்றும் சமூக இடைவெளி விதிகளின் விதிமீறல்களைகூட்டுக் குற்றமாகஆக்கியுள்ளது.
  • இது இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் நபர்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த செயல்பாடுகளைத் தடை செய்கின்றது.
  • இந்த அவசரச் சட்டமானது வணிக அமைப்புகள் மற்றும் இதர பொது இடங்களுக்காக வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமாக ரூ.5,000 விதிக்க வழிவகை செய்கின்றது.
  • பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமாக  விதிக்கப் படவுள்ளது.
  • பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப் படவுள்ளது.
  • தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப் படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்