TNPSC Thervupettagam

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022 முக்கிய அம்சங்கள்

March 24 , 2022 852 days 897 0
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 33,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு வேளாண் துறைக்காக, கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 32,775.78 கோடி ரூபாயிலிருந்து ரூ.231.90 கோடி ரூபாய் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்து அதற்காக 5,157.56 கோடி ரூபாயினை  ஒதுக்கி உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 126 லட்சம் மெட்ரிக் டன்களாகும்.
  • பருத்தி மகசூலை அதிகரிப்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு நிதியுடன் சேர்த்து, 15.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலையானப் பருத்திச் சாகுபடி என்ற திட்டமானது அமல்படுத்தப்படும்.
  • தமிழகத்தின் தஞ்சாவூர், சேலம், திருவள்ளூர், நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சோயா அவரைச் சாகுபடியை அதிகரிப்பதற்கு வேண்டி சில சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட 3,204 கிராமப் பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் செலவில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டமானது அமல்படுத்தப்பட்டது.
  • மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் தர்மபுரி, நாகப்பட்டினம், வேலூர், மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 4 புதிய உழவர் சந்தைகள் நிறுவப்படும்.
  • மாநில மரமான பனை மரத்தின் எண்ணிகையை அதிகரிப்பதற்காக 10 லட்சம் பனை விதைகளை மாநில அரசு விநியோகம் செய்யும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு மானியமாக மெட்ரிக் டன்னிற்கு ரூ.195 மானியம் வழங்கப் பட உள்ளதால் அதன்மூலம் 1.2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துடன் இணைந்து “தமிழ் மண் வளம்” என்ற ஒரு பிரத்தியேக தளமானது உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்