TNPSC Thervupettagam

தமிழ்நாட்டினைச் சேர்ந்த புதிய ஆளுநர்

February 15 , 2023 522 days 269 0
  • தமிழ்நாட்டினைச் சேர்ந்தவரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான C. P. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப் பட்டு உள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இவர் கோவை தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அகில இந்தியத் தென்னை நார் வாரியத்தின் தலைவராக இவர் பணியாற்றினார்.
  • தற்போது அந்த மாநில ஆளுநராக உள்ள ரமேஷ் பெய்ஸ் என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட உள்ளார்.
  • 2014 ஆம் ஆண்டு முதல் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டினைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்