TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பசுமை இல்ல வாயு இருப்புநிலை அறிக்கை

March 4 , 2024 137 days 322 0
  • 2வது தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பசுமை இல்ல வாயு (GHG) பதிவு அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கைக்கு ‘தமிழ்நாட்டின் பசுமை இல்ல வாயுப் பதிவு நிலை மற்றும் நிகரச் சுழிய உமிழ்வு நிலை மாற்றத்திற்கான செயல்பாட்டுப் பாதைகள்’ என்று தலைப்பிடப் பட்டு உள்ளது.
  • 2005 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 84% உமிழ்வு அதிகரிப்பு பதிவானது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வை அடைவதற்கு சுமார் 475 ஜிகாவாட் சூரிய சக்தியும் 90 ஜிகாவாட் காற்றாலை சக்தியும் அவசியம் ஆகும்.
  • தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டில் 184 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வு பதிவானது.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வில் எரிசக்தித் துறையானது 77%, தொழில்துறை செயல் முறை மற்றும் தயாரிப்பு பயன்பாட்டுத் துறை 6%, AFOLU துறை 12% மற்றும் கழிவுத் துறை 5% என்ற அளவுகளில் தமது சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்