TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கிராமம்

November 24 , 2017 2428 days 1008 0
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அம்மனூர் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச வைஃபை (Wi-Fi) வசதியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக அம்மனூர் கிராமம் உருவாகியுள்ளது.
  • பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் முயற்சியுடன் மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி இந்த வைஃபை (Wi-Fi) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
  • வைஃபை பயன்பாட்டின் மூலம் கிராம விவசாயிகள் விவசாய இடுபொருட்களின் விலை விவரம், மின்கட்டணம், வானிலை அறிக்கை, விவசாயம் தொடர்பான தகவல்கள் மற்றும் புதிய வேளாண் தொழிற்நுட்பங்கள் பற்றிய தகவல்களை பெற இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்