தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் இதுவரையில் 2,53,719 ஆமை முட்டைகளைச் சேகரித்துள்ளனர் என்ற ஒரு நிலையில் இது கடந்த ஆண்டில் சேகரிக்கப்பட்ட சுமார் 2,58,907 என்ற மொத்த எண்ணிக்கையினை நெருங்குகிறது.
இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கடற்கரைகளில் 1,200 க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கின.
மார்ச் 11 ஆம் தேதி நிலவரப்படி, 89,784 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் கடலூர் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 47,082 முட்டைகளுடன் சென்னை ப்பிரிவு இடம் பெற்றுள்ளது.
73,728 முட்டைகளுடன் நாகப்பட்டினம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
விழுப்புரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பிரிவுகளில் முறையே 23,403 மற்றும் 18,073 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.