TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்றவர்கள்

January 28 , 2023 541 days 397 0
  • மருத்துவம், கலை, சமூகப் பணி உள்ளிட்ட துறைகளில் பங்காற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நிபுணர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  • பிரபல பாடகி வாணி ஜெயராம் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரம் (சமூகப் பணி), டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்), கே.கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை) ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நளினி பார்த்தசாரதியும் (மருத்துவம்) பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கோவிட்-19 மேலாண்மைக்கான சாத்தியமான மருந்தாக 'கபசுரக் குடிநீரை' முதலில் பரிந்துரைத்தவர்களில் டாக்டர் வேலுச்சாமியும் ஒருவர்.
  • மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே நபர் வாணி ஜெயராம் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்