TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய ஈரநிலங்கள்

February 2 , 2025 20 days 160 0
  • தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் ஆகிய இரண்டு பறவைகள் சரணாலயங்கள் தற்போது ராம்சர் தளங்கள் என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இதன் மூலம், நமது மாநிலத்தில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்பதோடு இதன் மூலம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து 10 தளங்களுடன் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
  • இராமநாதபுர மாவட்டம் சித்திரங்குடி மற்றும் கஞ்சிரன்குளம் ஆகிய இதர இரண்டு ராம்சர் சரணாலயங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மற்ற 2 புதியத் தளங்கள் கெச்சியோபால்ரி ஈரநிலம் (சிக்கிம்), மற்றும் உத்வா ஏரி (ஜார்க்கண்ட்) ஆகியனவாகும்.
  • இவ்வாறு, தற்போது இந்தியா மொத்தம் 89 ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.
  • 2002 ஆம் ஆண்டில் கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தின் மூலம் தமிழ்நாடு மாநிலமானது அதன் முதல் ராம்சர் அந்தஸ்தினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்