TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய டைடல் பூங்காக்கள்

June 27 , 2022 756 days 614 0
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையத்தைத் திறந்து வைத்தார்.
  • இது டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டது.
  • இது மாநிலத்தினால் திட்டமிடப்பட்ட மூன்று சிறப்பு மையங்களில் ஒன்றாகும்.
  • சீமென்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன்மிகு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் ஆகியவை மற்ற இரண்டுப் பூங்காக்களாகும்.
  • மேற்கொண்ட நிறுவனங்கள் GE Aviation நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
  • மேலும் அவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் இரண்டு தொழில்துறைப் புத்தாக்க மையங்களை (IICs) நிறுவினார்.
  • இது நான்காவது தொழில்புரட்சியை ஏற்படுத்துவதையும், தமிழ்நாட்டின் உற்பத்திச் சூழல் அமைப்பை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்களை நிறுவச் செய்வதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • இன்ஃபோசிஸ், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் இணைந்துத் தொழில்துறை 4.0 முதிர்வுக் குறியீட்டு ஆய்வையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்