TNPSC Thervupettagam

தம்மசக்கர தினம் 2022

July 17 , 2022 771 days 282 0
  • 2022 ஆம் ஆண்டின் தம்மசக்கர தினம் ஆனது உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் நகரில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தக் கொண்டாட்டங்கள் ஆனது "ஆஷாத பூர்ணிமா" அன்று,  "சர்வதேச புத்தக் கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது.
  • வைஷாக புத்தப் பூர்ணிமாவிற்குப் பிறகு, பௌத்தர்களுக்கு இரண்டாவது மிக முக்கியமானப் புனித நாளாக ஆஷாத பூர்ணிமா கருதப்படுகிறது.
  • புத்தரின் முதல் போதனையை நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இது தம்மச் சக்கரத்தின் முதல் சுழற்சி (திரிபீடக போதனை) நிகழ்வாகக் கருதப் படுகிறது”.
  • சாரநாத்தில் ஆற்றிய தனது முதல் பிரசங்கத்தின் போது, ​​புத்தர் தர்மசக்கரப் பிரவர்த்தனச் சூத்திரத்தைப் போதித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்