தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதாவினை மாநிலங்களவை நிறைவேற்றி உள்ளது.
எதிர்காலத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) நியமிப்பதற்கான வழிகளை இந்தச் சட்டம் வழங்கும்.
இந்தச் சட்டம் ஆனது, 1991 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்) என்ற சட்டத்தினை மாற்றி அமைக்கிறது.
தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையானது குடியரசுத் தலைவரால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீர்மானிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் நியமனமானது, தெரிவுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும்.
இக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:
பிரதமர்,
ஒரு அமைச்சரவை அமைச்சர், மற்றும்
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது பெரும்பான்மை கொண்ட எதிர்க் கட்சித் தலைவர்).
பாராளுமன்றம் இந்தத் தெரிவுச் செயல்முறையைப் பரிந்துரைப்பதற்கான சட்டத்தை உருவாக்கும் வரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் (அனூப் பரன்வால் வழக்கு) சமீபத்தில் தீர்ப்பளித்தது.