TNPSC Thervupettagam

தாக்குதல்களிலிருந்து கல்வி சார் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 09

September 11 , 2023 346 days 170 0
  • கல்வி சார் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைத்துக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்குமான அழைப்பினை விடுப்பதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஆனது 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • உலகளவில் 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கல்வி சார் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அல்லது கல்வி சார் கட்டமைப்பு வசதிகளை இராணுவங்கள் பயன்படுத்துதல் சார்ந்த 14,500க்கும் மேற்பட்டச் சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இத்தகைய தாக்குதல்களில் 28,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் காயமடைந்தனர், கொல்லப்பட்டனர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்