TNPSC Thervupettagam

தானியங்கு நிகழ்நேர செயல்திறன் கொண்ட ஸ்மார்ட் பலகை

October 25 , 2019 1732 days 550 0
  • டிஜிட்டல் இந்தியா, ஆதார், டிஜிட்டல் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களை திறம்பட கண்காணிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology - MeitY) தானியங்கு நிகழ்நேர செயல்திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட் பலகையை வெளியிட்டது.
  • இந்த ஸ்மார்ட் பலகையின்  செயல்திறன் மத்திய அரசு, மாநில அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்களுக்கு  MeitY ஆல் செயல்படுத்தப்படும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஒற்றைச் சாளர அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஸ்மார்ட் பலகையானது ஒரு புதிய டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கலை நிறுவலான 'டிஜிட்டல் ராட்டையையும்' வெளியிட்டார்.
  • டிஜிட்டல் சர்க்கா என்பது டிஜிட்டல் சுழல் என்ற அமைப்புடன் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்ட ஒரு கலவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்