புகழ்பெற்ற பாரம்பரிய இசை விழாவின் 95வது பதிப்பு ‘தான்சேன் சமரோஹ் 2019’ ஆனது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் தொடங்கியது.
இந்த விழாவானது 1924 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.
இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய இசையமைப்பாளர், இசைக் கலைஞர் மற்றும் பாடகரான மியான் தான்சேனின் நினைவாக கொண்டாடப் படுகின்றது.